'பிரிட்ஜ் கோர்ஸ்' – 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்...!

The Department of School Education is preparing and offering a new curriculum package called 'Bridge Course' for students in grades 6 to 9 during the current academic year.

பள்ளிக்கல்வித்துறை நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற  புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை தயாரித்து வழங்குகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் பொதுத்தேர்வுகள் மாணவர்களுக்கு நடத்தப்படவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக அனைத்து மாணவர்கள் தேர்வு இல்லாமல் பாஸ் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் கல்வித் திறன் குறையாமல் இருப்பதை தவிர்க்க புதிய முறையை கையாள கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ‘பிரிட்ஜ் கோர்ஸ்’ என்ற  புதிய பாடத்திட்டம் தொகுப்புகளை தயாரித்து வழங்குகிறது.  புத்தகத்தை மாணவர்கள் ஆசிரியர்கள் உதவியுடன் வீட்டில் இருந்தே படிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், கல்வி தொலைக்காட்சியில் குறிப்பிட்ட நேரத்தில் இந்தப் பாடப் புத்தகங்கள் தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுகிறது. இதனை மாணவர்கள் கவனித்து பயிலுமாறும்  அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  இதன்மூம் பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவ மாணவிகள் அடுத்த உயர்வகுப்பிற்கு செல்ல தேவையான அறிவுத்திறனை பெறுவார்கள் என கூறப்படுகிறது.