தமிழகத்தில் ஜூலை 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்..!!

Default Image

தமிழகத்தில் ஜூலை 3-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். 

வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் தென், உள் மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும், நாளை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தர்மபுரி, வேலூர், சேலம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வருகின்ற ஜூலை 1- ம் தேதி முதல் 3-ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய வட மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்