அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இன்று தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. காலை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025