அறநிலையத்துறை நிலம் – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

The High Court ordered that the temple lands should not be used for any other purpose as per the Trust Department Act.

அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு.

கோயில் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து 81 பேருக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கியதை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டது. நாமக்கல் வையப்பமலை சுப்பிரமணியசாமி என்பவர் கோயில் நிலை மாற்றப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கோயில் சார்பில் வழக்கு தொடுத்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையில், அறநிலையத்துறை நிலத்தை கோயில் பயன்பாடு தவிர, பிற தேவைகளுக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் அறநிலையத்துறை சட்டப்படி கோயில் நிலங்களை வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்தக்கூடாது எனவும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.