சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகம் மீது பாட்டில் வீச்சு.!

Published by
மணிகண்டன்

சென்னை தி-நகரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று இரவு 9 மணி அளவில் மர்ம நபர்கள் பாட்டில் , கற்கள் போன்ற பொருட்களை வீசியுள்ளனர். அந்த சமயம் கட்சி அலுவலகத்திற்குள் யாரும் இல்லாத காரணத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

மாநில தலைமை அலுவலகம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து கட்சி நிர்வாகிகள் மாம்பழம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர்களை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தமிழக பாஜகவினர் தொடர் கைது.? ஆளுநரிடம் புகார் அளிக்க உயர்மட்ட சிறப்பு குழு திட்டம்.!

இந்த சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி செய்தியாளர்களிடம் கூறுகையில், சம்பவம் நடந்த சமயத்தில் யாரும் இல்லாத காரணத்தால் எந்த பாதிப்பும் இல்லை. காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 24 மணிநேரமும் காவல்துறை பாதுகாப்பு அளித்து, இங்கே இருக்கும் தோழர்களின் (கம்யூனிஸ்ட் கட்சியினர்) பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

முன்னதாக கடந்த புதன் கிழமை, ஆளுநர் மாளிகை வாசல் அருகே உள்ள பேரிகார்ட் (தடுப்பு) மீது பெட்ரோல் பாட்டில் வீசிய கருக்கா வினோத் என்பவரை காவல்துறையினர் கைது செய்து  15 நாள் விசாரணை காவலில் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

11 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

12 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

13 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

14 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

14 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

15 hours ago