சென்னை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹோட்டலுக்கு தனியார் செயலி ஆட்டோ மூலம் வந்தபோது ஆட்டோ ஓட்டுநர் தன்னை பாலியல் ரீதியில் சீண்டியதாக சென்னை கல்லூரி மாணவி டிவிட்டரில் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னையில் கல்லூரி மாணவிக்கு தனியார் செயலி மூலம் ஆட்டோ ஓட்டும் ஓர் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிரவளையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை பாதிக்கப்பட்ட பெண் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ளதில், ‘ தான் ஒரு சென்னை பத்திரிகை கல்லூரியில் பயின்று வருகிறேன். சென்னை கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து ஹோட்டலுக்கு வருவதற்கு தனியார் செயலி மூலம் ஆட்டோ புக் செய்தேன்.
நானும் எனது நண்பரும் இருந்தோம். அப்போது அந்த ஹோட்டலில் இறக்கிவிட்ட அந்த ஓட்டுநர், என்னை தவறான நோக்கத்துடன் உடல் பாகங்கள் மீது கைவைத்தார். ‘ என குற்றம் சாட்டி அந்த ஆட்டோ ஓட்டுநர் பெயர் செல்வம் என குறிப்பிட்டார். இந்த பதிவில் தமிழ்நாடு காவல்துறையையும் டேக் செய்துள்ளார்.
unknown node