கீழடியில் 9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

கீழடியில் 8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.

கீழடியில் 8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் அகழ்வாராய்ச்சி பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 8 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளன.

9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் :

8ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் 2 வருடங்களாக நடைபெற்று கடந்த வருடம் அக்டோபரில் முடிந்தது. இதனை அடுத்து இன்று 9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் கீழடியில் தொல்லியல் துறையால் துவங்கிப்பட்டுள்ளன.

கீழ்நமண்டி :

இந்த கீழடியில் 2 ஏக்கர் பரப்பளவில் 9ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணியையும், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியில் முதற்கட்ட அகழ்வாராய்ச்சி பணியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக துவங்கி வைத்தார்.

இந்த நிகழ்வில், தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு , தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கீழடி குறித்த மொபைல் செயலியையும் முதல்வர் துவங்கி வைத்தார்.