தேர்தல் களத்தில் எங்களுக்கு போட்டி அவர்கள் தான் – முதல்வர் ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

MK Stalin: பாஜகவை ஏற்க மக்கள் தயாராக இல்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஊடகங்களுக்கு பேட்டியளித்த வருகிறார். அப்போது, திமுக அரசின் சாதனைகள், பாஜக மற்றும் அதிமுகவை விமர்சித்து குற்றசாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது ஊடகம் ஒன்றுக்கு முதல்வர் ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். அப்போது அவர் கூறியதாவது, தேர்தல் பிரச்சாரத்துக்காக செல்லும் இடமெல்லாம் இந்தியா கூட்டணிக்கும், திமுகவுக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு மீது எந்த அதிருப்தியும் நிலவவில்லை.

தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் உரிய முறையில் பயனாளிகள் அனைவருக்கும் சென்றடைந்துள்ளது.  நிதி நிலை சீரானதும் மீதமுள்ள வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். இந்தியா கூட்டணிக்கு எதிராக பிரச்சாரம் செய்து பாஜக தமிழ்நாட்டில் இருப்பை காட்ட பல வழிகளில் முயற்சி செய்து வருகிறது. பாஜக முயன்றாலும் மக்கள் அதை ஏற்க தயாராக இல்லை. தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்துள்ளது என்று அவர்கள் சொல்வதை ஏற்க முடியாது.

தேர்தல் களத்தில் திமுகவுக்கு போட்டி அதிமுகவும், சித்தாந்த ரீதியிலான களத்தில் பாஜகவும் எதிரியாக இருக்கின்றனர். இந்தியா கூட்டணி தான் நாட்டின் பிரதமர் முகமாக உள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் தட்பவெப்பத்தைப் பற்றி பாஜக இதுவரை புரிந்து கொள்ளவில்லை. மத்தியில் ஆட்சியில் இருப்பதாலும், ஊடகப் பிரச்சார பலத்தாலும் தங்கள் இமேஜைக் கட்டமைக்க முயற்சிக்கிறார்கள்.

பாஜகவின் மதவாத அரசியல் கொள்கையைத் திமுக எப்போதும் உறுதியாக எதிர்த்தே வந்திருக்கிறது. ஜனநாயகத்தில் மக்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றாக வேண்டும். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தபிறகு ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.

Recent Posts

உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்‌.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…

52 minutes ago

டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய முதல் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…

57 minutes ago

”இந்தியா தொட போகும் புதிய உச்சம்” கானா நாட்டு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை.!

கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…

1 hour ago

திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு.., 600 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…

3 hours ago

ஓசூரில் அதிர்ச்சி: 13 வயது சிறுவன் காரில் கடத்தி கொலை.., உறவினர்கள் போராட்டம்.!

கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…

3 hours ago

மக்களை திசைதிருப்பக் கூடிய விளம்பரங்களை வெளியிட பதஞ்சலி நிறுவனத்திற்கு தடை.!

டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…

4 hours ago