மோடி ஆட்சி மீண்டும் வந்தால் ஜனநாயகம் இருக்காது – முதல்வர் ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

MK Stalin: கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும் முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடைபெற உள்ளது. இதனால் மக்களவை தேர்தலை முன்னிட்டு, திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறன்றனர். இந்த நிலையில், மோடி ஆட்சி மீண்டும் வந்தால் ஜனநாயகம் இருக்காது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த முதல்வர் ஸ்டாலின் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது, எங்கள் கொள்கைக்கு நேர் எதிராக செயல்படும் அதிமுகவுடன் கைகோர்த்து செயல்படுவதாக கூறுவது தவறு. எடப்பாடி பழனிசாமியின் கட்சியை நாங்கள் திராவிட கட்சியாக நினைக்கவில்லை. பழனிசாமி கட்சிக்கும் திராவிட கொள்கைக்கும் தொடர்பு இல்லை.

நாடு முழுவதும் மதசார்பற்ற கட்சி பிரிந்து இருப்பதால் தான் பாஜக வெற்றி பெறுகிறது. தமிழ்நாடு என்பது தந்தை பெரியார் மண், சமூக நீதி மண், தமிழன் என்ற உணர்வோடு மக்கள் ஒற்றுமையாக வாழும் மண். தமிழ்நாட்டில் இதை ஒருமுகப்படுத்தியதை போல இந்தியா முழுமைக்கும் ஒருமைப்படுத்தி நினைத்தேன்.

எனது முயற்சி வெற்றி பெற்றதாகவே கருதுகிறேன். தமிழ்நாட்டில் மக்களை பிளவுபடுத்தும் மதவாதம் ஒருபோதும் முளைக்காது என்பதை பாஜக உணர வேண்டும். தேசிய அளவில் ஒற்றை சிந்தனையுடன் ஓர் அணியை உருவாக்க வேண்டும் என்று ஒன்றரை ஆண்டுகளாக கூறிவந்தேன். கருத்து கணிப்புகளை மீறி நாடு முழுவதும் மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி மீண்டும் அமைந்தால் இந்தியாவோ ஜனநாயகம் இருக்காது. இந்த மக்களவை தேர்தலில் பிரதமர் மோடி  சொல்லும் அளவுக்கு இடங்கள் கிடைக்காது என்றும் இந்திய ஒன்றியத்தை இந்தியா  கூட்டணி ஆள்கின்ற அளவுக்கு வலிமையான வெற்றி கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

10 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

10 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

11 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

13 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

13 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

14 hours ago