கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை நாளை ஆய்வு செய்ய உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின், டெல்டா பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு, கணக்கெடுப்பு எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இன்று அல்லது நாளை அறிக்கையை சமர்ப்பிப்பார்கள்.
அந்த குழு ஆய்வு மேற்கொண்ட அறிக்கையை சமர்பித்ததற்கு பிறகு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம். மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை கன்னியாகுமரி மாவட்டம் செல்கிறேன். மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து மொத்த கணக்கெடுப்பு வந்தபிறகு ஆய்வறிக்கையை பிரதமரிடம் அளித்து நிதி கோருவோம்.
மழைக்கால நடவடிக்கைகள் முடிந்த பிறகு கடந்த ஆட்சியில் வெள்ள பாதிப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முந்தைய ஆட்சியில் நடந்த முறைகேடுகளை கண்டறிய விசாரணை கமிஷன் அமைக்கப்படும். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு பற்றி கவலை இல்லை. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் வேலை செய்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…
சென்னை : குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…