சமூக தளங்களில் அவதூறு பரப்புவோரை கண்காணிக்க குழுக்கள்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பிப்பு!

சமூக தளங்களில் அவதூறு பரப்புவோரையும் தவறான தகவல்களையும் பதிவுடுவோரை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக

TNGovt

சமூக தளங்களில் அவதூறு பரப்புவோரையும் தவறான தகவல்களையும் பதிவுடுவோரை கண்காணிக்க மாவட்டந்தோறும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. அதன்படி, மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்கள், மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகங்களில் குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.

அதாவது, மத நல்லிணக்கத்தை சீர்குலைப்போர் மீது நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், அவதூறு மற்றும் தவறான கருத்துகளை பதிவிடும் சமூக வலைதளங்களை கண்காணித்து, தடுப்பதற்கு மாவட்ட எஸ்பிக்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களின் அலுவலகங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதள நுட்பங்களை அறிந்த நிபுணர்கள், இந்த சிறப்பு குழுவில் இடம் பெற்றுள்ளதாகவும் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.