சம்பளம் குறைப்பு???கொதிப்பில் குடிநீர் திட்ட பணியாளர்கள்

பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு என்று புகார்  எழுந்துள்ளது.

பேரூராட்சிகளில் பணியாற்றும் குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் குறைப்பு என்று புகார்  எழுந்துள்ளது.

தமிழமெங்கும் பேரூராட்சிகளில் பணியாற்றக் கூடிய குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு மாத சம்பளம் குறைக்கப்பட்டதாக  புகார் எழுந்துள்ளது.

குடிநீர் திட்ட பணியாளர்களுக்கு மாத சம்பளமாக ரூ.1,900ல் இருந்து ரூ.1,300ஆக குறைக்கப்பட்டுள்ளதால் ஊழியர்கள் கலக்கமடைந்து உள்ளனர்.

மேலும் கொரோனா தொற்றுக் காலத்தில் சம்பளக்குறைப்பு  ஊழியர்களில் இடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு திடீரென்று குறைக்கப்பட்ட ஊழியர்களின் சம்பள குறைப்பால் ஒரு ஊழியருக்கு ரூ.7,000 வரை இழப்பு ஏற்படும் நிலையானது உருவாகி உள்ளது.