கொரோனா.! வாட்ஸப்பில் வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கர் கைது.!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பற்றி பொய்யான செய்தியோ, வதந்தியை சமூக வலைதளத்திலோ, வேறு எந்த வடிவிலோ பரப்பினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்த நிலையில் கொரோனா வைரஸை மாற்றுமுறை சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்கள் மூலம் ஹீலர் பாஸ்கர் கூறிவந்தார்.
இந்நிலையில் கொரோனா குறித்து வீண் வதந்திகளைப் பரப்பியதாகக் கூறி ஹீலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025