புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் மேலும் ஒருவருக்கு கொரோனா..!

புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக அங்கு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், நேற்று 112 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,151 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரிந்த அலுவலகத்தில் ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது. இதன்காரணமாக ஆளுநர் அலுவலகம், இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டது, மேலும் அதை போல் இன்றும் ஒரு ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.