தமிழகத்தில் 1000-ஐ தாண்டியது கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை.!

தமிழகத்தில் இன்று 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.அதனால், தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,885-ஆக அதிகரித்துள்ளது.
இதில், சென்னையில் இன்று மட்டுமே 28 பேருக்கு கொரோனா உறுதியாகி பாதிப்பு எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று மட்டுமே 60 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தமாக 1020 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 838 ஆக உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025