தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் பயன்படுத்த, தயாரிக்க டதை – தமிழக அரசு

தமிழகம் முழுவதும் மாஞ்சா நூல் தயாரிக்கவும், அதை பயன்படுத்தவும் தடை விதித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கண்ணாடித் துண்டுகள் மற்றும் விஷம் நிறைந்த வேதிப்பொருட்கள் கலந்து அவை செய்யப்படுவதால், அதற்கு தடை விதிக்க ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், காத்தாடி பறக்கும் போது அதற்காக பயன்படுத்தப்படும் மாஞ்சா நூல் மனிதர்களுக்கும் பறவைகளுக்கும் காயங்களை ஏற்படுத்துவது உண்மை தான். இந்த காயங்கள் மனிதர்கள், விலங்குகள் மற்றும் பறவைகளின் மரணத்தை ஏற்படுத்தும் அபாயகரமானதாக மாறிவிடும். எனவே, மாஞ்சா நூல் எனப்படும் பிளாஸ்டிக் அல்லது செயற்கை நூலால் செய்யப்பட்ட காத்தாடி நூலின் அபாயகரமான விளைவுகளிலிருந்து மக்களையும் பறவைகளையும் பாதுகாப்பது விரும்பத்தக்கது.
பிளாஸ்டிக் பொருட்களின் மிக நீண்ட ஆயுட்காலம் மற்றும் இயற்கையில் மக்கும் தன்மை இல்லாததால், இவை தொடர்ந்து கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு, வடிகால் பாதைகள், ஆறுகள், ஓடைகள் போன்ற இயற்கை நீர்வழிகள் மற்றும் பசுக்கள் மற்றும் பிற விலங்குகளின் மூச்சுத் திணறல் போன்ற பிரச்சினைகளை தொடர்ந்து ஏற்படுத்துகின்றன.
நைலான் அல்லது செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட மாஞ்சா அல்லது காத்தாடி பறக்கும் நூலுக்கு முழுத் தடை விதிக்கப்படும். நைலான், பிளாஸ்டிக் அல்லது பிரபலமாக அறியப்படும் ‘மாஞ்சா நூல்’ மற்றும் பிற செயற்கை பட்டம், பறக்கும் செயற்கைப் பொருட்களால் செய்யப்பட்ட காத்தாடி பறக்கும் நூலின் உற்பத்தி, விற்பனை, சேமிப்பு, கொள்முதல், வழங்கல், இறக்குமதி மற்றும் பயன்பாடு ஆகியவற்றுக்கு முழுமையான தடை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025