நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓபிஎஸ்,இபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ்த்திரையுலகில் தனது திறமையான நடிப்பால் மக்களை கவர்ந்தவரும், மக்கள் அனைவராலும் சூப்பர் ஸ்டார் என அன்போடு அழைக்கப் படுபவருமான நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் 72-வது பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இதற்கிடையில்,தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:உள்ளார்ந்த அன்புடன் பழகிடும் இனிய நண்பர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! 72-ஆவது அகவையில் அடியெடுத்து வைக்கும் அவர், இன்னும் பல ஆண்டுகள் தமிழ் மக்களைத் தன்னிகரற்ற தனது திரையாளுமையால் மகிழ்விக்கவும்; நல்ல உடல்நலத்துடன் திகழவும் விழைகிறேன்”, என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில்,அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் அவர்கள் இறை அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பான பிறந்தநாள் வாழ்த்து குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:
“இன்று தனது 72-வது அகவையில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பரும், தமிழ்த் திரையுலகில் இன்றளவும் கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவரும், ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், பத்மவிபூஷண், தாதா சாகெப் பால்கே விருது உட்பட பல விருதுகளைப் பெற்றவரும், சூப்பர் ஸ்டார்’ என்று தமிழக மக்களால் அன்போடு அழைக்கப்படுபவருமான திரு. ரஜினிகாந்த அவர்களுக்கு எனது பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு. ரஜினிகாந்த் அவர்கள் இறை அருளால் நல்ல ஆரோக்கியத்துடன் பல்லாண்டுகள் வாழ்ந்து உயர்ந்திட எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சுகிறேன்”,என்று தெரிவித்துள்ளார்.
மேலும்,நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து,தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…