திண்டுக்கல் ஆணையர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

Income Tax Raid

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 

திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன் பொறுப்பேற்ற மகேஸ்வரியின் வீட்டில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

வருமான வரித்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழு திண்டுக்கல்லில் உள்ள ஆணையர் மகேஸ்வரி வீட்டில் சோதனை செய்து வருகின்றனர். மகேஸ்வரி முன்னதாக காஞ்சிபுரம் மாநகராட்சி வேலை பார்க்கும் போது அரசு கொள்முதல் விவகாரத்தில் முறைகேடு நடந்தாகவும், அந்த புகாரின் பெயரில் தான் தற்போது இந்த வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன . உறுதியான தகவல்கள் வருமானவரித்துறை சோதனைக்கு பின்னரே தெரிவிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்