பஞ்சாமிர்தம், மஞ்சளை தொடர்ந்து பூட்டு, கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறீயீடு!

Default Image

புவிசார் குறியீடு என்பது அந்தந்த பகுதிகளில் விளையும், தயாரிக்கப்படும் பொருட்களுக்கு காப்புரிமை பெறுவது போல் ஆகும். அதாவது, பழனி பஞ்சாமிர்தம், சேலத்து மாம்பழம் போல அந்தந்த பகுதிகளில் சிறப்பாக விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்படும். இதன்மூலம் வேறு பகுதிகளில் இந்த பொருட்களை போலியாக தயாரித்து விற்பனை செய்வது தடுக்கப்படுகிறது.

சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டம் பழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலை பூண்டு, ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.

2013 ஆம் ஆண்டு திண்டுக்கல் பூட்டு தொழிலாளர் சங்கத்தினர் அரசிடம், திண்டுக்கல் பூட்டிற்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதேபோல் காரைக்குடி ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் சங்கம் சார்பில் 2013 ஆம் ஆண்டு கண்டாங்கி சேலைக்கும் புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அவையாவன,  சேலத்து மாம்பழம், ஓசூர் ரோஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலை, ராஜபாளையம் நாய், கோடாலிகருப்பூர் சேலை  இவைகளுக்கு தற்போது புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், அந்த பொருட்களை வெளியூர்களில் போலியாக தயாரித்து விற்பனை செய்வது குற்றமாகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்