கொடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது திமுக – அண்ணாமலை

Published by
லீனா

கொடநாடு விவகாரத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படுகிறது திமுக என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். 

கொடநாடு கொள்ளை மற்றும் கொலை சம்பவம் தொடர்பாக தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் விசாரணையில் புதிய வாக்குமூலங்களால், சில திருப்பங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், போலீஸ் விசாரணையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குறித்து வாக்குமூலம் அளித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.  கொடநாடு விவகாரம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கொடநாடு வழக்கில் அதிமுகவினர் மீது எந்த தவறும் இல்லை. முடித்து வைக்கப்பட்ட வழக்கில் முன்னாள் முதல்வரின் பெயரை சேர்த்திருக்கிறார்கள். இது அரசியல் காழ்புணர்ச்சி என்றும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக வழக்கை மீண்டும் விசாரிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ்நாட்டில் திமுக அரசின் ஆட்சி இனிப்பு, கசப்பு, காரம் கலந்த காணப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து செயல்பட்டது இனிப்பான விஷயம். ஆனால், தேர்தல் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றாதது, பாஜக தொண்டர்கள் கைது செய்து, அவர்கள் மீது பொய்யான நடவடிக்கைகளை மேற்கொண்டது, இதெல்லாம் கசப்பு மற்றும் காரமான விஷயம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

23 minutes ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

1 hour ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

2 hours ago

நாங்கள் ஈரானுக்கு ஆதரவா போரில் இறங்கவில்லை…ரஷ்யா அதிபர் புடின் கொடுத்த விளக்கம்!

ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…

2 hours ago

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

3 hours ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

3 hours ago