உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட உடன் பிறப்புகளிடமே 10 இலட்சம் கேட்ட திமுக மா.தலைமை.!!! புகார் கடிதம் இணையத்தில் வெளியாகி அம்பலம்..!!!

Published by
Kaliraj
  • தற்போது உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அதற்காக  வேட்பு மனு தாக்கல் நடைபெற்றுவருகிறது.
  • தற்போது ஆண்ட கட்சியில் பல லட்சம் கேட்டு வசமாக மாட்டிக்கொண்ட அவலம்.

இந்நிலையில் தேர்தலில் போட்டியிட விருப்பமனு வாங்கிய தமிழகத்தினை ஆண்ட  கட்சி  நடக்க இருக்கும் ஒன்றியக் கவுன்சிலர் பதவிகளுக்கு அந்த கட்சி சார்பில்  போட்டியிட தேர்தல் செலவுகளுக்கு மற்றும் மேற்படி செலவுகளுக்கு என மொத்தம்   ரூ 10,00,000/-. முதல் ரூ 15,00,000/-.  வரை வைத்திருப்பவர்களுக்கு  மட்டுமே சீட் வழங்குவதக  சலசலப்பாக பேசப்பட்டு வந்தது. இந்த செய்தி தற்போது நிரூபணமாகி உள்ளது. இந்த பதறவைக்கும் செய்தி  புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தில்  பகிரங்கமாகவே அரங்கேரியுள்ளது.

Image result for dmk anna arivalayam

இதில் புதுக்கோட்டை மாவட்ட  முன்னால்  சட்ட மன்ற உறுப்பினரான ஆலவயல் சுப்பையா, அந்த கட்சியின்  தெற்கு மாவட்ட செயலாளரான  சட்டமன்ற உறுப்பினரான ரகுபதி மீது கட்சி தலைமைக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அவர் அனுப்பிய  புகார் மனுவில், புதுக்கோட்டை மாவட்ட ஊராட்சியின்  12- வது வார்டு பகுதியில்  போட்டியிட எனது மகனான  முரளிதரன் விருப்ப மனு கொடுத்திருந்தார்.

இதன் காரணமாக நேர்காணல் முடிக்கப்பட்டு சீட் ஒதுக்கும் நிலையில் தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  ரகுபதி  என் மகனிடம் ரூ 10 லட்சம் ரூபாய் கேட்டார் என்றும், அந்த தொகையை  கொடுத்தால் மட்டுமே  சீட் என்றும், மேலும்  மற்ற தேர்தல் செலவை நீங்களே ஏற்க வேண்டும் என்றும் நிர்பந்தம் செய்துள்ளதாகவும், அதனால் கட்சித் தலைமை தான் முன்வந்து  எனது மகனுக்கு சீட் ஒதுக்கித் தர வேண்டும் என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.மேலும் இந்த கடிதத்தை  சமூக வலைதளங்களிலும் பரப்பிவிடப்பட்டது.இது குறித்து கருத்து தெரிவித்த  மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான  ரகுபதி, ரூ 10 லட்ச ரூபாய்  கேட்கவேண்டிய நிலையில் நாங்கள் இல்லை என்றும், அந்த புகார் அவதூறானது என்று குறிப்பிட்டார். இது குறித்து உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு  அவர்கள் மீது கட்சி  தகுந்த நடவடிக்கை எடுக்கும் திமுக தரப்பில்  கூறுகின்றனர்.

Published by
Kaliraj

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

11 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

12 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

13 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

13 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

14 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

15 hours ago