காஞ்சிபுரம் பெருமாள் கோவிலில் அத்திவரதர் கடந்த ஜூலை 1-ம் தேதி அனந்த குளத்தில் இருந்து எடுக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிக்க தொடங்கினார். முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர்.
பின்னர் கடந்த 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து அத்தி வரதரை காண தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். மேலும் கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களிலும் இருந்து பக்தர்கள் வந்து அத்திவரதரை தரிசனம் செய்ய வந்தனர்.
அத்திவரதரை ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் என மாவட்டம்நிர்வாகம் கூறியுள்ளது.இதையடுத்து கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு அத்திவரதர் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டார்.
இந்நிலையில் அத்திவரதர் வைக்கப்பட்டு உள்ள அனந்தசரஸ் குளத்தில் ஆழ்துளை கிணற்றின் துறைகளின் நீரை நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. பொற்றாமரைக் குளத்தில் உள்ள நீர் இளம்பச்சை நிறத்தில் உள்ளதால் பாசி படிய வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் தெரிவிக்கப் பட்டது.இதை தொடர்ந்து அனந்தசரஸ் குளத்தில் பொற்றாமரைக் குளத்தின் நீர் நிரப்ப கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…
டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…
மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…
கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…
சென்னை : பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…
சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…