தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையுமா, இணையாதா? என்பது ரகசியம் – அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் 

தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையுமா, இணையாதா? என்பது ரகசியம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  தெரிவித்துள்ளார்.Minister Velamandi Natarajan

அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையுமா, இணையாதா? என்பது ரகசியம் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக-பாஜக  பேச்சுவார்த்தையில் கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக.

unknown node

ஆனால் அதிமுக-பாமக –பாஜக -தேமுதிக  கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறியே நீடித்து வருகிறது.

கடலூர் ,கள்ளக்குறிச்சி,தருமபுரி, ஆரணி, சிதம்பரம்,கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகிய தொகுதிகளை  அ.தி.மு.கவிடம் பாமக கேட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல்  கடலூர்,கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, அரக்கோணம் ஆகியவற்றை தேமுதிகவும் கேட்பதாலேயே தொகுதி பங்கீடு முடியாமல் இழுபறி  நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

பாமகவிற்கு இணையாக தேமுதிக தொகுதிகள் கேட்பதால் கூட்டணியில் சிக்கல் நீடிப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

unknown node

இந்நிலையில் கூட்டணி தொடர்பாக அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,தேமுதிக எங்கள் கூட்டணியில் இணையுமா, இணையாதா? என்பது ரகசியம்.விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்து முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்  தெரிவித்துள்ளார்.