“இம்மானுவேல் சேகரனார் நாட்டைக் காத்த இராணுவ வீரர்;சமூக விடுதலைக்கான போராளி”- முதல்வர் ஸ்டாலின்..!

Published by
Edison

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்கவேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இரட்டை குவளை முறைக்கு எதிராக மாநாடு,தீண்டாமை ஒழிப்பு மாநாடு ,ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராட்டம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்ற தியாகி இமானுவேல் சேகரன் அவர்கள் 1957-ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இதனையடுத்து, அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 11 ஆம் தேதி அவரது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

அதன்படி,இன்று பலரும் அவரது நினைவு நாளை அனுசரித்து வருகின்றனர்.இந்நிலையில்,அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

மேலும்,இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“நாட்டைக் காத்த இராணுவ வீரராகவும் – சமூக விடுதலைக்கான போராளியாகவும் முனைப்புடன் செயலாற்றிய தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவுநாளில் அவரது உரிமைக்குரலை என்றும் ஒலிக்கச் செய்ய உறுதியேற்று வணங்குவோம்”,என்று பதிவிட்டுள்ளார்.

 

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

5 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

6 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

6 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

7 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

7 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

8 hours ago