கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. சி.த. செல்லப்பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு. ஆ. இளவரசன் ஆகிய இருவரையும் நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.சி.த.செல்லப்பாண்டியன் அவர்களும், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் திரு.ஆ. இளவரசன் அவர்களும், இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வர்த்தக அணிச் செயலாளர் மற்றும் சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
unknown node