துணை முதல்வர் பேச்சுகள்., முதலமைச்சரின் சூசகமான பதில்.! “நான் அமெரிக்கா சென்றாலும்…,”

Published by
மணிகண்டன்

சென்னை : நான் அமெரிக்கா சென்றாலும் கட்சியையும்,  ஆட்சியையும் நான் கவனித்துக் கொண்டிருப்பேன் என இன்றைய தினம் நடைபெற்ற திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

திமுக தலைவராகவும், தமிழக முதலமைச்சராகவும் மு.க.ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக உள்ள உதயநிதி ஸ்டாலின் திமுகவின் இளைஞரணி செயலாளராகவும் கட்சியில் தீவிரமாகச் செயலாற்றி வருகிறார். அவரை துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்க வைக்க வேண்டும் என திமுக கட்சியில் குரல்கள் வலுத்து வருகிறது.

இது குறித்து அமைச்சர் ராஜகண்ணப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கூட பொது மேடையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக வர வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். பல்வேறு மாவட்ட திமுக ஆலோசனைக் கூட்டங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டன.

இப்படியான சூழலில், இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாவட்டச் செயலாளர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்களைக் கூறினார். அப்போது அவர் பேசுகையில், ” முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றாலும் கட்சியையும், ஆட்சியையும் நான் கவனித்துக் கொள்வேன்.” எனக்கூறி, துணை முதல்வர் பேச்சுகளுக்கு மறைமுகமாகப் பதில் அளித்தார் என்றே அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முன்னதாக இன்றைய மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் துணை முதல்வர் கோரிக்கைகளை முன்வைப்பதாகக் கூறப்பட்டு இருந்தது. மேலும், வரும் 27ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா செல்ல உள்ளதால் இன்று துணை முதல்வர் பற்றிய ஆலோசனை இருக்கும் எனக் கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

துணை முதலமைச்சர் கேள்வி குறித்து அமைச்சர் உதயநிதி ஒரு நிகழ்வில் பேசுகையில், முதலமைச்சருக்குத் துணையாக நாங்கள் அனைவரும் செயல்பட்டு வருகிறோம் எனப் பேசினார். இதே துணை முதல்வர் பற்றிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருமுறை செய்தியாளர்களின் பேசுகையில், “துணை முதல்வர் கோரிக்கைகள் வலுத்து வருகிறது. இன்னும் பழுக்கவில்லை.” என அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி பேசியிருந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

20 minutes ago

யூடியூப் புதிய விதிகள் : தரமற்ற வீடியோக்களுக்கு இனி காசு இல்லை!

யூடியூப் உலகம் முழுக்க 200 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் பயன்படுத்தப்படும் ஒரு பிரம்மாண்ட மேடையாக இருந்து வருகிறது.  இதில் பலர்…

1 hour ago

’பென்ஸ்’ பட ஒளிப்பதிவாளரை திருமணம் செய்யப்போகும் நடிகை தான்யா!

சென்னை : நடிகை தன்யா ரவிச்சந்திரனுக்கும், ‘பென்ஸ்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நடைபெற்றது. ஜூலை…

2 hours ago

த.வெ.கவின் அடுத்த டார்கெட்…கோலாகலமாக நடந்த 2வது மாநாடு பந்தக்கால் நடும் விழா!

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த…

3 hours ago

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை…

3 hours ago

நாளை 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…இன்று 2 மாவட்டத்துக்கு எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 16 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago