#BREAKING: அதிமுக முன்னாள் எம் .பிக்கு 7 ஆண்டு சிறை..!

அதிமுக முன்னா எம்.பி கே .என் ராமச்சந்திரன் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்றதில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து எம்.பி கே

அதிமுக முன்னா எம்.பி கே .என் ராமச்சந்திரன் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் கடன் பெற்றதில் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை தொடர்ந்து எம்.பி கே .என் ராமச்சந்திரன் , அவரது மகன் ராஜசேகரன் மற்றும் வங்கி மேலாளர் தியாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையெடுத்து இந்த வழக்கு எம்.பி , எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு  நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் லஞ்சம் தந்து கடன் பெற்ற வழக்கில் முன்னாள் எம்.பி கே .என் ராமச்சந்திரன் குற்றவாளி என  இன்று பிற்பகல் நீதிமன்றம்  அறிவித்தது.

இந்நிலையில் எம்.பி கே .என் ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டு சிறை தண்டைனையும்  ,வங்கி மேலாளர் தியாகராஜனுக்கு  5 ஆண்டு சிறை தண்டைனையும் சென்னை சிறப்பு நீதிமன்றம் வழங்கியது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதியில் எம்.பி ஆக கடந்த 2014 முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்தவர் கே .என் ராமச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.