போலி பிஎச்டி சான்றிதழ் – அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Default Image

அண்ணா பல்கலைக்கழகத்தின் விடைத்தாள் பணியில் ஈடுபட்ட பேராசிரியர்களுக்கு TDS எனப்படும் வரி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையை முறையாக செலுத்தவில்லை எனக் கூறி, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்த நிலையில், தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள் சிலரின் பிஎச்டி சான்றிதழ்களை, அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வுசெய்தபோது, போலி என கண்டறியப்பட்டதை தொடர்ந்து, அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும், அண்ணா பல்கலைக்கழக பதிவாளா் கருணாமூர்த்தி அறிக்கை ஒன்றை அனுப்பினார்.

அதில், 2020-21ம் கல்வியாண்டு இணைப்பு அங்கீகாரம் பெற, பொறியியல் கல்லூரிகள் அளித்துள்ள விவரங்களில், சில பேராசிரியா்களின் ஆதாா், நிரந்தர கணக்கு எண் விவரங்கள் தவறாக உள்ளதாகவும், மேலும் சில பேராசிரியா்கள் 2க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். அத்துடன் 100க்கும் மேற்பட்டோர் போலி பிஎச்.டி. பட்டங்களை சமா்ப்பித்து, பணியில் சேர்ந்துள்ளதாக தெரிவித்துள்ள பதிவாளர், எனவே கல்லூரிகள், தங்களிடம் பணிபுரியும் பேராசிரியா்களின் பிஎச்.டி. பட்டம் குறித்து, சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகத்திடம் உண்மை தன்மை சான்றிதழை பெற்று, வரும்16ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai