தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
நாளை கொண்டாடவுள்ள விநாயகர் சதுர்த்திக்கு பொது இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவோ மற்றும் சிலையை கரைக்கவும் தமிழக அரசு தடை விதித்தது. இதனை சில அரசியல் காட்சிகள் எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுத்தனர். பின்னர் விநாயகர் சதுர்த்திக்காக தளர்வுகள் அளிக்க இயலாது என தமிழக அரசு கூறியதை ஏற்று உயர்நீதிமன்றம், வீடுகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்க அனுமதி வழங்கியது
சென்னையில் மெரினா கடற்கரையை தவிர்த்து பிற நீர்நிலைகளில் தனிநபர் வைத்துள்ள விநாயகர் சிலைகளை கரைக்கலாம் என்றும் சதுர்த்திக்காக பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் செல்லவோ கூடாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட, ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக பாஜக சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அரசின் வழிகாட்டுதலின்படி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படும் என்றும் விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்து முன்னணியின் நிலைப்பாடுதான் பாஜகவின் நிலைப்பாடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…