இளைஞரின் கண்ணைக்கட்டி காட்டில் வைத்து தாக்கிய கும்பல் கைது!

Published by
Rebekal

திருடி விட்டதாக கூறி இளைஞரின் கண்ணை கட்டி வைத்து காட்டில் பிரம்பால் அடித்து தாக்கிய கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பாபநாசம் தாலுக்கா பூண்டி மேல தெருவில் வசித்து வரக்கூடிய குணசேகரன் என்பவனின் மகன் தான் ராகுல். கூலித்தொழில் செய்து வரக்கூடிய ராகுல் திருடி விட்டதாக கூறி அந்த ஊரில் இருக்ககூடிய சில  இளைஞர்கள் சேர்ந்து ராகுலின் கண்ணை கட்டி வைத்து அருகே உள்ள காட்டிற்கு அழைத்துச் சென்று மரத்தில் பிடித்து வைத்துக்கொண்டு பிரம்பால் பின்புறம் சரமாரியாக தாக்கினர். வலி பொறக்க முடியாமல் ஒரு கட்டத்தில் ராகுல் மயங்கி விழ, அப்போதும் விடாமல் ராகுலை அந்த கும்பல் பிரம்பால் மிகவும் தாக்கியது. மீண்டும் விழித்துக் கொண்டு அண்ணா விட்டுடுங்க வேண்டாம் என ராகுல் கெஞ்சினாலும், சற்றும் மனம் இரங்காத மனிதாபிமானமற்ற இந்த இளைஞர்கள் மீண்டும் மீண்டும் ராகுலை தாக்கிக் கொண்டே இருந்தனர்.

brutualacct

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியதையடுத்து, இந்த சமன்பதிற்கு கண்டனங்கள் குவிந்தது. தான் செய்யாத குற்றத்திற்காக தாக்கப்பட்டதாக கூறி ராகுல் விஷம் அருந்தியுள்ளார். இதனை அடுத்து அருகில் உள்ள தஞ்சை அரசு மருத்துவமனையில் ராகுல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், தாக்குதல் நடத்திய இளைஞர்கள் ராஜதுரை, பார்த்திபன், சரத், விக்கி ஆகிய 4 பேர் தான் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளதுடன், மேலும் இருவரையும் தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Published by
Rebekal

Recent Posts

ஏர் இந்தியா நிறுவனத்தில் 51 பாதுகாப்பு குறைபாடுகள் – DGCA தணிக்கையில் அம்பலம்.!

டெல்லி : இந்தியாவின் விமானப் பாதுகாப்பு தொடர்பான குறைபாடுகள் குறித்து சமீபத்திய DGCA தணிக்கைகள் பல முக்கியமான பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளன.…

2 hours ago

மோடி எங்கே? அமித்ஷா பதிலுரை.., எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.!

டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்தொடரின் போது இல்லாதது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா…

3 hours ago

கே.டி.ராகவனுக்கு மீண்டும் பொறுப்பு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு பாஜகவில் புதிய மாநில நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், நடிகை குஷ்பு உள்பட 14 பேர்…

4 hours ago

பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!

சென்னை : நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு (EOW)…

4 hours ago

ஆக.1ம் தேதி முதல் இந்தியாவுக்கு 25% வரி – அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

அமெரிக்கா : அமெரிக்காவுடன் சுமுகமான வர்த்தக உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 1-ஆம் தேதி) முதல்…

5 hours ago

நாசா – இஸ்ரோ கூட்டு முயற்சி.., விண்ணில் சீறி பாய்ந்தது ‘நிசார்’ செயற்கைக்கோள்.!

ஆந்திரா : நாசா மற்றும் இஸ்ரோ கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட 'நிசார்' செயற்கைக்கோள் இன்று (ஜூலை 30, 2025) வெற்றிகரமாக…

5 hours ago