இரண்டு நாள் தொடர் விடுமுறை…சிறப்பு பேருந்து இயக்கம்!

SETC Bus

மொஹரம் பண்டிகையையொட்டி, நாளை சனிக்கிழமை அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை ஆகும். இதனால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வருகிறது. தீபாவளி, பொங்கல் என முக்கிய பண்டிகையின் போது, பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக சிறப்பு பேருந்து இயக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், பொதுமக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக, இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாகவும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்