திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசரசிகிச்சைபிரிவில்,வென்டிலேட்டரில்சிகிச்சைபெற்றுவந்தபெண் ஒருவர், மின்வெட்டு ஏற்பட்ட நிலையில், அவர் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் மருத்துவர்களிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இதுகுறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், ‘திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அவசர சிகிச்சை பிரிவில், வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர், அரை மணி நேரத்திற்கும் மேல் மின்வெட்டு காரணமாக மரணமடைந்துள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
பிறந்தநாளை முன்னிட்டு முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!
திமுக ஆட்சியில், ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகள், எத்தனை துச்சமாக நடத்தப்படுகின்றன என்பதை இந்தத் துயரச் சம்பவம் மீண்டும் உணர்த்தியிருக்கிறது. அரசு மருத்துவமனைகள் இத்தகைய அவல நிலையில் இருக்கும்போது, தமிழக மருத்துவக் கட்டமைப்பை ஐரோப்பிய நாடுகளுடன் தான் ஒப்பிட வேண்டும் என்று வெட்கமே இல்லாமல் கூறிக்கொள்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஊழல் செய்து சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை என்றால், தனியார் மருத்துவமனையில் உயர்தர சிகிச்சைதான் வழங்க வேண்டும் என்று ஓடோடிச் செல்லும் திமுக அரசு மற்றும் அமைச்சர்கள், ஏழை எளிய மக்களின் உயிர் காக்கும் அரசு மருத்துவமனைகளை, இத்தனை கவனக்குறைவாக நடத்துவதற்கு பாஜகசார்பாக வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் துயர சம்பவத்தில் பலியான சகோதரி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க, திமுக அரசை வலியுறுத்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
