மாநில உரிமையை அரசு ஒருபோதும் விட்டுக்கொடுக்காது – அமைச்சர் உதயநிதி

சென்னை லால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அமைச்சர்

Minister Udhayanidhi stain

சென்னை லால்டாக்ஸ் சாலையில் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாமை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன்பின் பேசிய அமைச்சர் உதயநிதி, சென்னை தூய்மையாக இருப்பதற்கு தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக பார்க்கும் பணியே காரணம்.

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கமே வாங்காத குஜராத் மாநிலத்துக்கு மத்திய அரசு அதிக நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில சுயாட்சியை பறிக்கும் வேலையை பாஜக செய்கிறது. இதற்கத்தான் இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்தை பாரபட்சமாக பார்க்கிறது. எனவே, காவிரி விவகாரத்தில் மாநிலத்தின் உரிமையை தமிழ்நாடு அரசு விட்டு கொடுக்காது என்றும் அடுத்தாண்டு நடைபெறும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்தார்.