கொரோனனாவால் நிறுத்தப்பட்ட உடற்பயிற்சி பாடத்திட்டத்தை 2 ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளில் மீண்டும் தொடங்க அனுமதி.
தமிழகத்தில் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட உடற்பயிற்சி பாடத்திட்டத்தை 6 முதல் 9 -ஆம் வகுப்புகள் வரை மீண்டும் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுத்தேர்வு காரணமாக 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு PT பீரியட் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் 1-12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.
முன்னதாக நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020-ஆம் ஆண்டு பள்ளிகளில் உடற்கல்வி வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது நோய்த் தொற்று கட்டுக்குள் வந்துள்ளதால் பள்ளிகளில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் PT பீரியட் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…