சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை!

கடந்த சில நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, வேலூர், தேனி, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், கோவை, நீலகிரி, திருப்பூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக, சென்னைக்கு நேற்றிரவு கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கொட்டித் தீர்த்தது.
சென்னையில் கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், கொளத்தூர், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம், கிண்டி, ஆலந்தூர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, நந்தனம், கொளத்தூர், எழும்பூர், வேப்பேரி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
மேலும், தாம்பரம் அடுத்த சேலையூரில் திடீரென பெய்த மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இந்நிலையில், தாம்பரம் ரயில்வே சுரங்கப் பாதையில், கொட்டும் மழை எனும் பாராமல் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் தேக்கத்தால் பொதுமக்கள் செல்லும் சாலைகளில் பாதிப்பு ஏற்படத வகையில், மழை நீரை வெளியேற்றும் பணியை பார்வையிட்டார்.