பரபரப்பு...கோவை நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர்.!

கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில்  கவிதா என்ற பெண் மீது சிவக்குமார் என்பவர் ஆசிட் வீசியுள்ளார். இதை தடுக்க முயன்ற வழக்கறிஞர்  ஒருவருக்கும் காயம்

கோவை முதலாவது குற்றவியல் நீதிமன்ற வளாகத்தில்  கவிதா என்ற பெண் மீது சிவக்குமார் என்பவர்ஆசிட் வீசியுள்ளார்.இதை தடுக்க முயன்ற வழக்கறிஞர்  ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.  மேலும்,ஆசிட்வீசிய அந்த நபரை வழக்கறிஞர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மேலும், ஆசிட்வீச்சில் காயமடைந்த கவிதா தற்போது  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, சிவக்குமாரிடம் போலீசார்விசாரணை செய்து வந்த நிலையில், முதற்கட்ட விசாரணையில் கணவரே மனைவி மீது ஆசிட் வீசியது தெரியவந்துள்ளது.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது அவரது கணவரேஆசிட்வீச்சில் ஈடுபட்டுள்ள சம்பம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.