தனது மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்ட கணவர்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா ?

Default Image

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அடுத்த கூனன்ப்பட்டறையை சேர்ந்தவர் காஞ்சனா-யோகேஸ்வரன் தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 2007-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தை அணுகி விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்னர் யோகேஸ்வரன், காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வாட்சப்பில் பரப்பியதாக தெரிகிறது. இதனையடுத்து, செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் காஞ்சனா அளித்த புகாரின் பெயரில், யோகேஸ்வரனை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.
இதனையடுத்து, தற்போது காஞ்சனா பெயரில், முகநூலில் போலி கணக்கு தொடங்கி அதில் காஞ்சனாவின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து, அலைபேசி என்னுடன் வெளியிட்டுள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் சிலரின் புகைப்படடகியும் அவர் தவறாக சித்தரித்து பதிவிட்டுள்ளார்.
இவர் பதிவிட காஞ்சனாவின் தொலைபேசி என்னை தொடர்பு கொண்டு பலரும் தனக்கு மனா உளைச்சலை அளித்துள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து காஞ்சனாவின் உறவினர்கள், செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில், யோகேஸ்வரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 06042025
War Mock Drill in India
BJP Lady Person murder in Pattukottai Tanjore district
MIGM Exp successfully tested by NAVY and DRDO
Vadakadu Riot - Pudukottai Police
SRHvDC - IPL2025
Hyderabad vs Delhi