ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்ப்பு ! 590 கி.மீ தொடர் மனித சங்கிலி போராட்டம் !

Default Image

மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து  விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது. மரக்காணம் முதல் ராமேஸ்வரம் வரை சுமார் 590 கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்ச்சியாக இந்த மனித சங்கிலி போராட்டமானது நடைபெற்று வருகிறது.
டெல்டா மாவட்ட பகுதிகளில் விவசாய நிலங்களில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். விவசாயம் செழிப்பாக இருக்கும் இந்த பகுதிகளில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் விவசாயம் முற்றிலும் பொய்த்து போகும் சூழல் உருவாகும் என்று தெரிவித்துள்ளனர்.
காவல்துறை இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு அனுமதி அளிக்காத நிலையில், நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். நீதிமன்றமானது சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai