2ஆவது நாளாக வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை...!

வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை  நடத்தி வருகின்றனர்.தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்ற வண்ணமே உள்ளது.

unknown node

திருநெல்வெலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்தவர் வைகுண்டராஜன்.இவரது வி.வி.மினரல்ஸ் நிறுவனம், கடந்த 25 ஆண்டுகளாக தூத்துக்குடி கடற்கரையோரத்தில் தாதுமணலைப் பிரித்தெடுத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது.நேற்று  வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வைகுண்டராஜன் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்நிலையில் வி.வி மினரல்ஸ்க்கு சொந்தமான இடங்களில் 2ஆவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.