காவேரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு… கர்நாடகாவில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு.!

உச்சநீதிமன்ற தீர்ப்பின்கீழ், காவேரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்பட வேண்டிய உரிய அளவிலான தண்ணீரை திறந்துவிட கோரி தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொன்டு இருந்தது.
தங்களிடம் உரிய அளவு தண்ணீர் இல்லை. மழைபெய்து நீர்வரத்து அதிகரித்தால் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக கர்நாடக அரசு தெரிவித்து வந்தது.
இந்நிலையில் காவேரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையின் காரணமாக நீர்வரத்து அதிகமான காரணத்தால், கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் நீரின் அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பிலிகுண்டுலுவுக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில் தற்போது 12500 கனஅடியாக நீர்வரத்தின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்ட காரணத்தால் விவசாயிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.