#BREAKING: கோவையில் யானைகள் புத்துணர்வு முகாம் அறிவிப்பு..!

வரும் 8ஆம் தேதி முதல் யானைகள் புத்துணர்வு முகாம் பவானி ஆற்றுப்படுகையில் 48 நாட்கள் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவையில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெறும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இம்முகாமின் துவக்கவிழா வருகின்ற 8-ஆம் தேதி அன்று காலை காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் நடைபெறுகிறது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து அறநிலை துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் திருமடங்களுக்கு சொந்தமான யானைகள் மற்றும் புதுச்சேரி திருக்கோயில்களுக்குச் சொந்தமான யானைகளுக்கு இந்த முகாமில் கலந்துகொள்ள உள்ளன.
யானைப் பாகன்கள் அனைவரும் முகாமிற்கு வரும் போது கட்டில் கொண்டுவரவேண்டும். யானைகளை அழைத்துச் செல்லும் வழியில் மின்சார வயர்கள் குறுக்கும் நெடுக்குமாக இருக்க வாய்ப்புள்ளதால் அதை முன்கூட்டியே அறிந்து யானைகளை மிகப் பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். கொரோனா தடுப்பு வழிமுறைகள் தவறாமல் பின்பற்ற இந்து அறநிலைத்துறை அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025