#JustNow: மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த 3,000 பேர்.. வரலாற்றை எடுத்துரைத்த முதலமைச்சர்!

Published by
பாலா கலியமூர்த்தி

கடந்த ஆண்டு இதே நாளில்தான் திமுக வெற்றி பெற்றது என்று மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழாவில் முதல்வர் உரை.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அப்போது, மாற்றுக் கட்சியில் இருந்து விலகிய 3,000 பேர் முதலமைச்சர் முக ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதன்பின்னர் இவ்விழாவில் திமுகவில் இனைந்தவர்களை வரவேற்று முதலமைச்சர் உரையாற்றினார். அவரது உரையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தமிழர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கும் இயக்கம் திமுக. மக்களுக்காக தொடர்ந்து போராடி, வாதாடி வருகிறோம். 73 ஆண்டுகால வரலாற்றை கொண்டது திமுக.

1957-ஆம் ஆண்டு திமுக முதல்முறையாக தேர்தல் களத்தில் இறங்கியது. முதல் தேர்தலில் 17 இடங்களில் வெற்றிபெற்ற திமுக, 1962 தேர்தலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று கட்சியானது. 1967ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சி அமைத்தது திமுக. திமுக தலைவராக அண்ணா பொறுப்பேற்றபோது அவருக்கு 40 வயது. நெருக்கடி நிலை காலத்தில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. 13 ஆண்டுகளுக்கு பிறகு 1989-ஆம் ஆண்டு மீண்டும் திமுக ஆட்சி அமைந்தது. 6வது முறையாக 2021ல் திமுக ஆட்சியை அமைத்துள்ளது என்று வரலாற்று சிறப்புகளை எடுத்துரைத்தார்.

ஆட்சி என்பது சொகுசாக நாம் வாழ்வதற்கான பதவி என்று நினைக்காமல் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, ஏழை மக்களுக்காக பாடுபட்ட இயக்கம் திமுக. கலைஞர் 25 வயதிலேயே தன்னை திமுகவில் இணைத்து கொண்டு கட்சிக்காக பணியாற்றினார். அண்ணா ஆட்சி காலத்தில் தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. கலைஞர் வாதாடி, போராடி செம்மொழி என்ற அந்தஸ்தை பெற்று தந்தார். நான் 13, 14 வயதில் சென்னை கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை தொடங்கி பணியை தொடங்கினேன்.

அரசு வேலையில் தமிழர்களுக்குத்தான் வேலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அரசு பணியில் சேருவதற்கு தமிழ் மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசு பணிக்காக நடத்தும் அனைத்து தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை தகுதி தேர்வாகியுள்ளது திமுக. ஆலயங்களில் தமிழில் வழிபாடு நடத்துவதற்கு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட அளவில் உள்ள அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அரசு கோப்புகள் அனைத்தும் தமிழில் தயாரிக்கப்பட வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. தெற்காசிய நாடுகளில் உள்ள 5 பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு உதவி பொருட்களை அனுப்ப மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில்தான் திமுக வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளைவிட அதிகமாக இந்த ஓராண்டில் செய்துள்ளோம் என தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

LSG vs GT: இறுதி வரை போராட்டம்.. வீன் போன ஷாருக் அரைசதம்.. லக்னோ மாஸ் வெற்றி.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

5 hours ago

சோப்பை விளம்பரம் செய்ய ரூ.6.2 கோடி.., கர்நாடக அரசால் தமன்னாவுக்கு வலுக்கும் விமர்சனம்.!

கர்நாடகா : மைசூர் சாண்டல் சோப்பின் பிராண்ட் அம்பாசிடராக நடிகை தமன்னாவை கர்நாடக அரசு சார்பில், 2 வருடத்திற்கு ரூ.6.20…

6 hours ago

LSG vs GT: ஒரே ஆளு.., மரண அடி அடித்த மிட்செல் மார்ஷ்! மிரண்டு போன குஜராத் அணிக்கு இது தான் இலக்கு.!

அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…

7 hours ago

பாகிஸ்தானுக்கு ‘முக்கியமான தகவல்களை’ பகிர்ந்து கொண்ட வாரணாசியைச் சேர்ந்த நபர் கைது.!

டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…

8 hours ago

”த.வெ.க இன்னொரு பா.ஜ.க.. அங்க எல்லாமே ஏமாற்றம் தான்..” தவெக TO திமுக வைஷ்ணவி பளிச்.!

கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…

9 hours ago

”சல்மான் கான் என்னை அழைத்தார், அவரை 6 மாதங்களாக தெரியும்” வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண் கைது.!

மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…

9 hours ago