கமல்ஹாசன் அதிரடி ..! 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமனம் ...!

மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசன் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத்

மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசன் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி மாதம் 21-ந் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியைத் தொடங்கினார். மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர், கொடி ஆகியவற்றை அறிவித்தார்.

unknown node

மக்கள் நீதிமைய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீப காலமாக தனது அரசியல் பயணத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறார்.இதன் பின் டிசம்பர் 22 ஆம் தேதி   நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது . ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் உறுப்பினர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.இதன் பின்னர்  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,கூட்டணி குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் வழங்கியுள்ளனர். ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்தார்.இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி  தலைவர் கமல்ஹாசன் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.அதில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமிக்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளுக்கும் 575 க்கும் மேற்பட்ட தொகுதி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.