கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு – மேலும் இரு காவலர்களிடம் விசாரணை!

Published by
பாலா கலியமூர்த்தி

கோடநாடு வழக்கு தொடர்பாக கூடலூர் காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை.

உதகை மாவட்ட பழைய காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி நடந்த கோடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக தனிப்படை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பான விசாரணை நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் ஏடிஎஸ்பி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 5 தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக இந்த வழக்கில் முதல் நபராக சேர்க்கப்பட்டுள்ள சயான் மற்றும் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேலத்தில் விபத்தில் உயிரிழந்த கனகராஜ், மனைவி, சகோதரர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது.

இதைத்தவிர அரசுத்தரப்பு சாட்சியாளர்கள் சிலரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதன்படி, வழக்கில் 36வது சாட்சியான ஷாஜி, 38வது நபராக சேர்க்கப்பட்ட அனிஷ் ஆகிய இருவரிடம் நேற்று விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, மேலும் இரு காவலர்களிடம் விசாரணை தனிப்படை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோடநாடு கொலை, கொள்ளை குற்றம் நடந்தபோது தப்பித்தவர்களை கூடலூர் சோதனை சாவடியில் பிடித்த, காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் இவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.

இன்றைய தினமும், இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார்கள் தொடர்பாக தான் காவலர் சத்யன், ஆய்வாளர் மீனாகுமாரிடம் இன்று மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, கோடநாடு எஸ்டேட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரான்கள் பறந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

13 hours ago

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

14 hours ago

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

15 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

15 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

16 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

16 hours ago