கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு.! ஜூன் 23க்கு ஒத்திவைத்தது நீதிமன்றம்.!

Kodanad Estate

கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு விசாரணையை ஜூன் 23க்கு ஒத்திவைத்தது உதகை அமர்வு நீதிமன்றம். 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான உதகை கோடநாடு பங்களாவில் கடந்த 2017 ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி காவலாளி 11 பேர்கொண்ட கும்பலால் கொலை செய்யப்பட்டார். அங்கிருந்த முக்கிய ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டன.  அதில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் என்பவர் அதே ஏப்ரல் மாதம் 28இல் விபத்தில் உயிரிழந்தார்.

அடுத்தடுத்து நடந்த உயிரிழப்புகள், கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் கூட கனகராஜ் உயிரிழப்பதற்கு முன்னதாக சந்தித்த எடப்பாடி ஜோதிடர் மற்றும் ஜெயலலிதாவுடன் ஒன்றாக இருந்த சசிகலா ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த இருந்ததாக செய்திகள் வெளியாகின.

இந்த வழக்கு விசாரணை விவரங்கள் கடந்த 5 வருடங்களாக உதகை முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக சிபிசிஐடி போலீசார் பல்வேறு ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். இதனை அடுத்து இன்று இந்த வழக்கு விசாரணையில், வழக்கின் விசாரணை வரும் ஜூன் 23ஆம் தேதி நடைபெறும் என ஒத்திவைத்து உதகை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies