சென்னை :தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவிருக்கிறார். இதனையடுத்து, நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு பட்ஜெட்டை சென்னையில் 100 இடங்களில் நேரலை செய்யப்படும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற ரயில் கடத்தல் சம்பவம் முடிவுக்கு ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இந்த சம்பவத்தில், மொத்தம் 21 பயணிகள் மற்றும் 4 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாவும் ரயிலை கடத்திய 33 பாலோச் போராளிகளும் (BLA) இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது,
