தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த கோரி கடந்த 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் அக்டோபர் மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்த வேண்டுமென ஜூலை மாதம் உத்தரவு விட்டது.
ஆனால் மாநில தேர்தல் ஆணையம் மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதால் அதை காரணமாக காட்டி மேலும் நான்கு வாரம் அவகாசம் கேட்டனர். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி தீபக் குப்தா தலைமையில் அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி நீதிமன்றத்தில் டிசம்பர் முதல் வாரம் குறிப்பாக இரண்டாம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பை வெளியிட முயற்சி மேற்கொண்டிருக்கிறோம் என கூறினார்.
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிவிப்புக்கான பணிகள் முடிவடைந்ததால் நாளையில் இருந்து வாரத்திற்குள் கண்டிப்பாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
டமாஸ்கஸ் : இஸ்ரேல் தனது அண்டை நாடான சிரியாவில் ஒரு பெரிய வான்வழித் தாக்குதலை நடத்திருக்கிறது. காசாவில் ஹமாஸ் மற்றும்…
சென்னை : முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என திமுக…
இங்கிலாந்தில் 200 ஆண்டுகள் பழமையான மற்றும் அந்நாட்டின் அடையாளமாக விளங்கிய சைக்காமோர் கேப் மரத்தை வெட்டியதற்காக இரண்டு நபர்களுக்கு 4…
சென்னை : விஷாலின் 35-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடந்து முடிந்தது. தற்பொழுது, 'ரெட் பிளவர்' திரைப்பட நிகழ்வில் கலந்து…
சென்னை : தமிழ்நாட்டில் மருத்துவக் கழிவுகளை அனுமதியின்றி கொட்டுவது கடுமையான குற்றமாகக் கருதப்படுகிறது. இதற்காக, தமிழ்நாடு அரசு குண்டர் சட்டத்தின்…
சென்னை : ஆளுநர் மாளிகையில் கடந்த ஜூலை 13-ம் தேதி அன்று நடைபெற்ற மருத்துவர் தின நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர்…