13 மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கடிதம்.
வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுமண்டலம் புயலாக வலுப்பெற்றது. மாண்டஸ் புயல் நெருங்கிவரும் நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும், சென்னையில் இரண்டு நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வங்கக்கடலில் உருவான புயல் காரணமாக 13 மாவட்டங்களில் கன மழை இருக்கும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் கடிதம் எழுதியுள்ளார்.
unknown node