நவீன வேளாண் பாசனம் மற்றும் நீர்நிலை மீட்பு திட்ட இயக்குநர் மங்கத்ராம் சர்மாவை நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் வகையிலும், அவை மக்களுக்குச் சென்றடைவதை ஆய்வு செய்யும் வகையிலும் புதிய முயற்சியை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தப் புதிய திட்டத்துக்கான தொடா்பு அதிகாரியாக முதன்மைச் செயலா் அந்தஸ்திலான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என நீதி ஆயோக் அமைப்பு தெரிவித்திருந்தது.
இதன் அடிப்படையில், அரசின் முதன்மைச் செயலாளா் மங்கத்ராம் ஷர்மா, நிதி ஆயோக் தொடா்பு அதிகாரியாக நியமனம் செய்து தலைமை செயலாளர் இறையன்பு அறிவித்திருந்தார். இந்த நிலையில், நவீன வேளாண் பாசனம் மற்றும் நீர்நிலை மீட்பு திட்ட இயக்குநர் மங்கத்ராம் சர்மாவை நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நீர்ப்பாசன விவசாய நவீனமயமாக்கல் மற்றும் நீர்நிலைகள் மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை திட்ட இயக்குநர் பதவி வகித்து வந்த மங்கத்ராம் ஷர்மாவுக்கு கூடுதலாக சமூக சீரமைப்புத்துறை கடந்த ஜூன் மாதம் தமிழக அரசால் ஒதுக்கப்பட்ட நிலையில், மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தும் புதிய திட்டத்துக்கான நிதி ஆயோக் தொடர்பு அதிகாரியாக நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
டெல்லி : காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவில் உள்ள ஐஎஸ்ஐ முகவர்களைச் சுற்றி விசாரணை தீவிரமாக…
கோயம்புத்தூர் : இன்ஸ்டாகிராமில் பிரபலமான வைஷ்ணவி என்கிற கோவையைச் சேர்ந்த இளம் பெண் தவெகவில் உறுப்பினராக இருந்தவர். அண்மையில், தவெகவில்…
மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்குள் அடுத்தடுத்த இரண்டு நபர்கள் நுழைய முயன்றுள்ளனர். சல்மானின் வீட்டிற்கு வெளியே…
அகமதாபாத் : இன்று ஐபிஎல் 2025 இன் 64வது போட்டி குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
சென்னை : நடிகர் சண்முக பாண்டியன் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில் படை தலைவன் திரைப்படம் நாளை (மே 23ம் தேதி)…
சென்னை : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ஆயிரம் கோடிக்கு மேல் முறைகேடுகள் நடந்துள்ளது. தற்போது அது தொடர்பான 41 வழக்குகளின்…