நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கிய நடிகர் மன்சூர் அலிகான்.!

Published by
பாலா கலியமூர்த்தி

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான் திடீரென அக்கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியை தொடங்கியுள்ளார்.

சீமானின் நாம் தமிழர் கட்சியில் இதுவரை இருந்த மன்சூர் அலிகான், இன்று தனது கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும் தனது அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி, தமிழ்த் தேசிய புலிகள் கட்சி என்ற தனி கட்சியை மன்சூர் அலிகான் தொடங்கியுள்ளார்.

புதிய கட்சியை தொடங்கியபின் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், காலத்தின் கட்டாயமாகவும், தேவைக்காகவும் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற அமைப்பை தமிழர்களின் உறுதுணையோடு தொடங்குகிறேன். தமிழகத்தில் தமிழர்களுக்கே வேலை என்றும் மத்திய மாநில அரசு எந்த பணிகள் இருந்தாலும், தமிழர்களுக்கு கொடுக்க வேண்டும். அனைத்து வளங்களும் காப்பற்றப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த மண்ணை மீட்க, மத்திய அரசின் கொடூரமான சட்டங்களால் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு, கார்ப்பரேட் நிறுவனங்கள் நமது மண்ணை பிடித்து சூறையாடிக்கொண்டு இருக்கிறார்கள். அதை தடுத்து நிறுத்தும் முதல் கட்சியாக இந்த தமிழ் தேசிய புலிகள் கட்சி இருக்கும் என தெரிவித்துள்ளார். இன்று மாலை செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது என கூறியுள்ளார்.

மேலும், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தொகுதி ஒதுக்காததால் வருத்தம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தமிழகத்தில் ஏற்கனவே சரத்குமார், கமல்ஹாசன், டி ராஜேந்தர் உள்பட பல நடிகர்கள் கட்சியை ஆரம்பித்துள்ள நிலையில் தற்போது நடிகர் மன்சூர் அலிகான் புதிய கட்சியை அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

7 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

10 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

10 hours ago